/ புறநானூறு / 111: விறலிக்கு …

111: விறலிக்கு எளிது!

பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.

அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.
 
பறம்பு மலை இப்போது பெரிதும் இரக்கம் கொள்ளளத் தக்க நிலையில் உள்ளது. அதனை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகை இட்டிருக்கின்றனர். அவர்களின் வேல்-படையால் பறம்புமலை வேந்தனை வெல்ல முடியாது. என்றாலும் பறம்பு மலையைக் கிணை முழக்கத்துடன் பாடிக்கொண்டு செல்லும் விறலி அதனை தானமாகப் பெற்றுக்கொள்ளமுடியும். அவளுக்கு எளிது.