/ புறநானூறு / 275: தன் …

275: தன் தோழற்கு வருமே!

பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை
துறை: எருமை மறம்

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்
வடிமாண் எகம் கடிமுகத்து ஏந்தி, 5

ஓம்புமின், ஓம்புமின், இவண்! ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,
கன்றுஅமர் கறவை மான ;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.
 
கோடு என்னும் மரக்கிளையில் பூக்கும் வாகைப்பூ. வாகை என்பது வெற்றியின் சின்னம்
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று – என்பது திருக்குறள்.
வளைந்த பூ மாலை எனவும் பொருள் காண்பர்.
கொடுந்திரை ஆடை.
அலைபோல் மடிப்பினைக் கொண்ட பஞ்சகச்ச ஆடை.
குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் - என்பது திருக்குறள் (மடித்தற்று = பஞ்சகச்சமாக உடுத்திக்கொண்டு)
தன் தோழற்கு வருமே
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு – என்று இதனைத் திருக்குறள் விளக்குகி