/ புறநானூறு / 115: அந்தோ …

115: அந்தோ பெரும நீயே!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு: பறம்பின் வளமை.

ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு 5

இன்னான் ஆகிய இனியோன் குன்றே!
 
அவன் (பாரி) மூவேந்தர்க்கும் வேண்டாதவன் ஆயினான். மற்றவர்களுக்கெல்லாம் இனியவன் ஆயினான். எப்படி? ஒருபிறம் அவன் குன்றத்தில் ஆர்க்கும் அருவி ஒழுகுகிறது. மற்றொருபுறம் அவன் மற்றவர்களுக்கு ஊற்றித் தரும் இன்சுவைக் கள் ஒழுகுகிறது.