/ புறநானூறு / 298: கலங்கல் …

298: கலங்கல் தருமே

‘எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே : நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே_
நேரார் ஆரெயில் முற்றி,
வாய் மடித்து உரறி, நீ முந்து? என் னானே. 5

தேறல் கள்ளை அரசன் மட்டும் உண்கிறான்.
பகைவர் கோட்டையை முற்றுகை இட்டுக்கொண்டிருக்கையில் தன் வாயை மடித்து உருமுகிறான்.
மறக்குடி மகன் ஒருவனை “நீ முந்திச் செல்” என உருமுகிறான்.
இந்த அரசன் கொடியவன்.
கோட்டை முற்றுகையைக் கூறும் இந்தப் பாடலை – கரந்தை நெடுமொழி எனத் – திணை-துறை பகுத்தவர் குறிப்பிடுவது எதனால் என விளங்கவில்லை