/ புறநானூறு / 241: விசும்பும் …

241: விசும்பும் ஆர்த்தது!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே. 5

தன்னிடம் உதவி வேண்டிவந்த இரவலர்களுக்கெல்லாம் வலிமை மிக்க தேரிலேற்றி உதவிப் பொருள்களை வழங்கிய அண்டிரன் வருவான் என்று வச்சிரத் தடக்கை நெடியோன் (இந்திரன்) கோயிலுக்குள் அவனை வரவேற்கும் முரசு முழக்கம் வானத்தில் எழுகின்றது