/ புறநானூறு / 317: …

317: யாதுண்டாயினும் கொடுமின்!

பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை

வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. .. 5

.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.
 
கள்ளுண்ட மயக்கத்தில் வெற்றி வேலுடன் முற்றத்தில் கிடக்கும் இந்த வல்லாளனுக்குத் தோல் இருந்தாலும், பாய் இருந்தாலும், எது இருந்தாலும் உடனடியாகப் படுப்பதற்குக் கொடுங்கள்.
அன்று இவன் எமக்கும், பிறர்க்கும், யாராயினும் கள் தந்து களைப்புத் தீரத் தூங்கவைத்தவன் ஆயிற்றே.