/ Tamil Pulvarkal / கபிலர்

கபிலர்

  • கபிலரென்னும் பெயருள்ள முனிவர் சிலருண்டு; அவருள், எவருடைய பெயர் இவருக்கு இடப்பட்டதோ அது விளங்கவில்லை. இவர் அந்தணர். வேள்பாரியின் நண்பர். அவன் இறந்த பின்பு அவன் மகளிரை அழைத்துச்சென்று மணம் செய்துகொள்ளும்படி விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களை வேண்டி அவர்கள் மறுத்தமையால் வெறுத்துப் பின்பு அம் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்துத் தம் கடனைக் கழித்தனர். இவர் பிறந்த ஊர் பாண்டிநாட்டிலுள்ள திருவாதவூர்; இது “நீதிமாமதூக நீழ 2னெட்டிலை யிருப்பை யென்றோர், காதல் கூர் பனுவல் பாடுங் கபிலனார் பிறந்த மூதுார், சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துளங்கக் காட்டும், வேதநா யகனார் வாழும் வியன்றிருவாதவூரால்” (திருவால. 27 : 4) என்பதனால் வெளியாகின்றது. இவர் அந்தணவருணத்தினர்; “யானே, பரிசிலன் மன்னுமந்தணன்”, “யானே, தந்தை தோழ னிவரென் மகளிர், அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே” (புறநா. 200, 201) எனத் தம்மைப் புலப்படுத்துவதற்காக இவர் கூறிய செய்யுட்களும், “புலனழுக்கற்ற வந்த ணாளன்” (புறநா. 126) என மாறோக்கத்து 1. கலைமகள், தொகுதி, 8 : பக்கம் 226. 2.”நெட்டிலை யிருப்பை வட்ட வொண்பூ, வாடா தாயிற் பீடைப் பிடியின், கோடேய்க்கும்மே வாடிலொபைந்தலைப் பரதர் மனைதொறு முணங்கும், செந்தலை யிறலின் சீரேய்க் கும்மே”; இச்செய்யுள் தமிழ் நாவலர் சரிதையிற் கண்டது.
  • நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறிய செய்யுளும் இதனைப் புலப்படுத்தும். வேள்பாரியினுடைய உயிர் நண்பரும் அவனுடைய அவைக்களத்துப் புலவருமாக இவர் விளங்கினார். தன் மகளிரை மணஞ்செய்து கோடற்குத் தாம் விரும்பியபடி அவன் கேளாததுபற்றிச் சினந்து தமிழ்நாட்டு மூவேந்தரும் பெரும்போர்செய்ய நினைந்து நால்வகைச் சேனைகளோடும் அவன் மலையைச் சூழ்ந்தகாலையில் அவர்களைச் சிறிதும் மதியாது அவனுடைய அருமைக் குணங்களைப் புலப்படுத்திப் பாடினர்; அவ்வருமைச் செய்யுட்கள் இந்நுாலிற் காணப்படும்; அவனிறந்தபின்பு, இவர் பிரிவாற்றாது மனமுருகிப் பல செய்யுட்களாற் புலம்பி, அவன் புதல்வியரை அழைத்துச்சென்று மணஞ்செய்து கொள்ளும்படி இருங்கோவேள், விச்சிக்கோன் என்பவர்களை வேண்ட மறுத்தமைகண்டு அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிரைப் பார்ப்பார்க்கு வாழ்க்கைப்படுத்திவிட்டு வந்து தம்முடைய நட்புக்கடனைக் கழித்தனர். ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினர். ஐங்குறுநுாற்றிற் குறிஞ்சியைப் பொருளாகவுடைய மூன்றாம் நூறு இயற்றியவர் இவரே. பதிற்றுப் பத்தில் 7-ஆம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக்கடுங்கோவாழி யாதனிடம் நூறாயிரங்காணமும் அவன் நன்றாவென்னும் ஒருமலை மீது ஏறிக் கண்டு கொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றனர். பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்றாகிய இன்னாநாற்பதும் கலித்தொகையில் இரண்டாவதாகிய குறிஞ்சியிலுள்ள கலிப்பாக்களும் இவர் இயற்றியனவே. இவர் குறிஞ்சித்திணையில் மிகப் பயின்றவரென்றும், அதன் வளங்களை விளங்கப் பாடுதலிற் பேராற்றலுடையவரென்றும் இவர் இயற்றிய செய்யுட்கள் புலப்படுத்தும்; இவருடைய செய்யுட்கள், மிக்க இனிமையை யுடையன; பழைய இலக்கண உரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் ‘கபிலரதுபாட்டு’ என்னும் தொடர் மொழியே இதனை வலியுறுத்தும்; இவரருளிச்செய்தனவாக 278-பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன : நற். 20; குறுந். 29; கலித். 29; ஐங்குறு. 100; பதிற். 10; அகநா. 16; புறநா. 30; குறிஞ்சி. 1; “நெட்டிலை யிருப்பை” என்பது-1; திருவள். 1; இன்னாநாற்பது. 41. பன்னிருபாட்டியலில் இவர் பெயரினோடு சில சூத்திரங்கள் காணப்படுகின்றன. இவருடைய வாக்கில் விநாயகக்கடவுள், முருகக்கடவுள், சிவபெருமான், பலதேவர், திருமால் இவர்களுடைய துதிகள் வந்திருக்கின்றன. இதனால், இவர் சமயகோட்பாட்டிற் பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போன்றவராக எண்ணப்படுகிறார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் முத்தொகுதி நூல்களிலும் இவருடைய பாடல்களும் நூல்களும் கலந்திருத்தல் இவரது பெருமையை விளக்குகின்றது. “அரசவை பணிய வறம் புரிந்து வயங்கிய, மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையி னெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக், கபிலன்” (பதிற். 85) எனப் பெருங்குன்றூர்கிழாரும், “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”
  • (புறநா. 53) எனப் பொருந்திலிளங்கீரனாரும், “புலனழுக்கற்ற வந்த ணாளன். இரந்துசென் மாக்கட் கினியிடனின்றிப், பரந்திசை நிற்கப் பாடினன்”, “பொய்யா நாவிற் கபிலன்” (புறநா. 126, 174) என மாறோக்கத்துநப்பசலையாரும் பாடியவற்றைப் பார்க்கையில் இவருடைய மன வாக்குக் காயங்களின் தூய்மையும் அறம்புரி் கொள்கையும் பெரும்புலமையும் அன்புடைமையும் நட்பின் பெருமையும் நன்கு விளங்குகின்றன. இவராற் பாடப்பட்டோர் : அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன், சேரமான்மாந்தரஞ் சேரலிரும் பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வேள்பாரி, வையாவிக்கோப்பெரும்பேகன் என்பவர்கள். கொல்லிமலை, பறம்புநாடு, பறம்புமலை, முள்ளூர்மலை, முள்ளூர்க்கானமென்பவைகள் இவராற் பாராட்டப்பெற்றிருத்தலின், அவைகள் இவர் காலத்தில் விளக்கமுற்றிருந்தனவென்றும், இவர் பழகிய இடங்களென்றும் தெரிகின்றன. நட்பு, வண்மை, நன்றிமறவாமை என்பவைகளை இவருடைய செய்யுட்களிற் பரக்கக் காணலாகும். பழைய இலக்கண உரைகளில் வந்துள்ள ‘கபிலபரணர்’ என்பதனால் பரணர் என்பவருக்கும் “பின்னமில் கபிலன் றோழன் பெயரிடைக் காட னென்போன்” (திருவால. 20 : 1) என்னும் திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர் எண்ணப்படுகிறார். இவர் வேறு; தொகை நூல்களிற் காணப்படும் தொல்கபிலர் என்பவர் வேறு. வீரசோழியம், தொகைப்படலம், 6-ஆம் கட்டளைக்கலித்துறையுரையால், பரணருடன் இவர் வாது செய்தனரென்பது வெளியாகின்றது. 11-ஆம் திருமுறையில் வந்துள்ள மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச்செய்த கபிலதேவநாயனார் என்பவர் இவரேயென்று சிலர் கூறுவர். மேற்கூறிய திருவிளையாடற் புராணத்தில், இடைக்காடன் பிணக்குத்தீர்த்த திருவிளையாடல் : 11-ஆம் திருவிருத்தத்தில், “எனையந்தாதி சொன்னவன் கபிலன்” எனச் சிவபெருமான் கட்டளையிட்டருளியதாக வந்திருத்தல் காண்க. ‘முதலிற் கூறுஞ்சினையறி கிளவி’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதிய உரையால் கபிலராற் செய்யப்பெற்றுக் கபிலம் என்னும் பெயரிய நூலொன்று இருந்ததாகத் தெரிகிறது. இவருடைய விரிந்த வரலாற்றைப் பத்துப்பாட்டுப் பதிப்பிலுள்ள பாடினோர் வரலாற்றிற் காணலாம்.

கபிலர்

  • கபிலரென்னும் பெயருள்ள முனிவர் சிலருண்டு; அவருள், எவருடைய பெயர் இவருக்கு இடப்பட்டதோ அது விளங்கவில்லை. இவர் அந்தணர். வேள்பாரியின் நண்பர். அவன் இறந்த பின்பு அவன் மகளிரை அழைத்துச்சென்று மணம் செய்துகொள்ளும்படி விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களை வேண்டி அவர்கள் மறுத்தமையால் வெறுத்துப் பின்பு அம் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்துத் தம் கடனைக் கழித்தனர். இவர் பிறந்த ஊர் பாண்டிநாட்டிலுள்ள திருவாதவூர்; இது “நீதிமாமதூக நீழ 2னெட்டிலை யிருப்பை யென்றோர், காதல் கூர் பனுவல் பாடுங் கபிலனார் பிறந்த மூதுார், சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துளங்கக் காட்டும், வேதநா யகனார் வாழும் வியன்றிருவாதவூரால்” (திருவால. 27 : 4) என்பதனால் வெளியாகின்றது. இவர் அந்தணவருணத்தினர்; “யானே, பரிசிலன் மன்னுமந்தணன்”, “யானே, தந்தை தோழ னிவரென் மகளிர், அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே” (புறநா. 200, 201) எனத் தம்மைப் புலப்படுத்துவதற்காக இவர் கூறிய செய்யுட்களும், “புலனழுக்கற்ற வந்த ணாளன்” (புறநா. 126) என மாறோக்கத்து 1. கலைமகள், தொகுதி, 8 : பக்கம் 226. 2.”நெட்டிலை யிருப்பை வட்ட வொண்பூ, வாடா தாயிற் பீடைப் பிடியின், கோடேய்க்கும்மே வாடிலொபைந்தலைப் பரதர் மனைதொறு முணங்கும், செந்தலை யிறலின் சீரேய்க் கும்மே”; இச்செய்யுள் தமிழ் நாவலர் சரிதையிற் கண்டது.
  • நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறிய செய்யுளும் இதனைப் புலப்படுத்தும். வேள்பாரியினுடைய உயிர் நண்பரும் அவனுடைய அவைக்களத்துப் புலவருமாக இவர் விளங்கினார். தன் மகளிரை மணஞ்செய்து கோடற்குத் தாம் விரும்பியபடி அவன் கேளாததுபற்றிச் சினந்து தமிழ்நாட்டு மூவேந்தரும் பெரும்போர்செய்ய நினைந்து நால்வகைச் சேனைகளோடும் அவன் மலையைச் சூழ்ந்தகாலையில் அவர்களைச் சிறிதும் மதியாது அவனுடைய அருமைக் குணங்களைப் புலப்படுத்திப் பாடினர்; அவ்வருமைச் செய்யுட்கள் இந்நுாலிற் காணப்படும்; அவனிறந்தபின்பு, இவர் பிரிவாற்றாது மனமுருகிப் பல செய்யுட்களாற் புலம்பி, அவன் புதல்வியரை அழைத்துச்சென்று மணஞ்செய்து கொள்ளும்படி இருங்கோவேள், விச்சிக்கோன் என்பவர்களை வேண்ட மறுத்தமைகண்டு அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிரைப் பார்ப்பார்க்கு வாழ்க்கைப்படுத்திவிட்டு வந்து தம்முடைய நட்புக்கடனைக் கழித்தனர். ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினர். ஐங்குறுநுாற்றிற் குறிஞ்சியைப் பொருளாகவுடைய மூன்றாம் நூறு இயற்றியவர் இவரே. பதிற்றுப் பத்தில் 7-ஆம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக்கடுங்கோவாழி யாதனிடம் நூறாயிரங்காணமும் அவன் நன்றாவென்னும் ஒருமலை மீது ஏறிக் கண்டு கொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றனர். பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்றாகிய இன்னாநாற்பதும் கலித்தொகையில் இரண்டாவதாகிய குறிஞ்சியிலுள்ள கலிப்பாக்களும் இவர் இயற்றியனவே. இவர் குறிஞ்சித்திணையில் மிகப் பயின்றவரென்றும், அதன் வளங்களை விளங்கப் பாடுதலிற் பேராற்றலுடையவரென்றும் இவர் இயற்றிய செய்யுட்கள் புலப்படுத்தும்; இவருடைய செய்யுட்கள், மிக்க இனிமையை யுடையன; பழைய இலக்கண உரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் ‘கபிலரதுபாட்டு’ என்னும் தொடர் மொழியே இதனை வலியுறுத்தும்; இவரருளிச்செய்தனவாக 278-பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன : நற். 20; குறுந். 29; கலித். 29; ஐங்குறு. 100; பதிற். 10; அகநா. 16; புறநா. 30; குறிஞ்சி. 1; “நெட்டிலை யிருப்பை” என்பது-1; திருவள். 1; இன்னாநாற்பது. 41. பன்னிருபாட்டியலில் இவர் பெயரினோடு சில சூத்திரங்கள் காணப்படுகின்றன. இவருடைய வாக்கில் விநாயகக்கடவுள், முருகக்கடவுள், சிவபெருமான், பலதேவர், திருமால் இவர்களுடைய துதிகள் வந்திருக்கின்றன. இதனால், இவர் சமயகோட்பாட்டிற் பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போன்றவராக எண்ணப்படுகிறார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் முத்தொகுதி நூல்களிலும் இவருடைய பாடல்களும் நூல்களும் கலந்திருத்தல் இவரது பெருமையை விளக்குகின்றது. “அரசவை பணிய வறம் புரிந்து வயங்கிய, மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையி னெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக், கபிலன்” (பதிற். 85) எனப் பெருங்குன்றூர்கிழாரும், “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”
  • (புறநா. 53) எனப் பொருந்திலிளங்கீரனாரும், “புலனழுக்கற்ற வந்த ணாளன். இரந்துசென் மாக்கட் கினியிடனின்றிப், பரந்திசை நிற்கப் பாடினன்”, “பொய்யா நாவிற் கபிலன்” (புறநா. 126, 174) என மாறோக்கத்துநப்பசலையாரும் பாடியவற்றைப் பார்க்கையில் இவருடைய மன வாக்குக் காயங்களின் தூய்மையும் அறம்புரி் கொள்கையும் பெரும்புலமையும் அன்புடைமையும் நட்பின் பெருமையும் நன்கு விளங்குகின்றன. இவராற் பாடப்பட்டோர் : அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன், சேரமான்மாந்தரஞ் சேரலிரும் பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வேள்பாரி, வையாவிக்கோப்பெரும்பேகன் என்பவர்கள். கொல்லிமலை, பறம்புநாடு, பறம்புமலை, முள்ளூர்மலை, முள்ளூர்க்கானமென்பவைகள் இவராற் பாராட்டப்பெற்றிருத்தலின், அவைகள் இவர் காலத்தில் விளக்கமுற்றிருந்தனவென்றும், இவர் பழகிய இடங்களென்றும் தெரிகின்றன. நட்பு, வண்மை, நன்றிமறவாமை என்பவைகளை இவருடைய செய்யுட்களிற் பரக்கக் காணலாகும். பழைய இலக்கண உரைகளில் வந்துள்ள ‘கபிலபரணர்’ என்பதனால் பரணர் என்பவருக்கும் “பின்னமில் கபிலன் றோழன் பெயரிடைக் காட னென்போன்” (திருவால. 20 : 1) என்னும் திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர் எண்ணப்படுகிறார். இவர் வேறு; தொகை நூல்களிற் காணப்படும் தொல்கபிலர் என்பவர் வேறு. வீரசோழியம், தொகைப்படலம், 6-ஆம் கட்டளைக்கலித்துறையுரையால், பரணருடன் இவர் வாது செய்தனரென்பது வெளியாகின்றது. 11-ஆம் திருமுறையில் வந்துள்ள மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச்செய்த கபிலதேவநாயனார் என்பவர் இவரேயென்று சிலர் கூறுவர். மேற்கூறிய திருவிளையாடற் புராணத்தில், இடைக்காடன் பிணக்குத்தீர்த்த திருவிளையாடல் : 11-ஆம் திருவிருத்தத்தில், “எனையந்தாதி சொன்னவன் கபிலன்” எனச் சிவபெருமான் கட்டளையிட்டருளியதாக வந்திருத்தல் காண்க. ‘முதலிற் கூறுஞ்சினையறி கிளவி’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதிய உரையால் கபிலராற் செய்யப்பெற்றுக் கபிலம் என்னும் பெயரிய நூலொன்று இருந்ததாகத் தெரிகிறது. இவருடைய விரிந்த வரலாற்றைப் பத்துப்பாட்டுப் பதிப்பிலுள்ள பாடினோர் வரலாற்றிற் காணலாம்.

கபிலர்

  • இவர் வரலாற்றைப் பாடினோர் பெயர்வரிசையிற் காண்க.

கபிலர்

  • இவர் வரலாற்றைப் பாடினோர் பெயர்வரிசையிற் காண்க.