/ Tamil Pulvarkal / மதுரை மருதனிள …

மதுரை மருதனிள நாகனார்

  • இவராற் பாடப்பட்டோன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்; இவர் பாடலில், திரி புரவிசயமும், திருச்செந்தூரில் முருகக்கடவுள் எழுந்தருளிய துறைக் கண்ணுள்ள மணற்குவியல்களும் பாராட்டப்பெற்றுள்ளன. இறையனாரகப் பொருளுக்கு நல்லுரையியற்றியவர்களுள் இவருமொருவர். ‘உருத்திரசன்மன். . . . எல்லாரும் முறையே உரைப்பப் கேட்டு வாளாவிருந்து மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரோவழிக் கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்தி…….இருந்தான்’ (இறை. முதற் சூத்திரவுரை) என்பதனால், அவ்வுரையின் பெருமை விளங்கும். இவர் பாடல்கள் ஏனைத் தொகைகளிலும் (அகநா. குறுந். நா.) காணப்படுகின்றன.