/ Tamil Pulvarkal / குட்டுவன் …

குட்டுவன் கீரனார்

    • குட்டுவன் - குட்டநாட்டில் உள்ளவன்; கீரனாரென்பது இவரது இயற்பெயர். கீரனாரென்னும் பெயருள்ள புலவர் சிலர் இருத்தலின் இவர் பெயர்க்குத் தேயப்பெயரை அடைமொழியாக்கினர் போலும்; சிறந்த உபகாரியாகிய ஆய்அண்டிரன் தன் உரிமை மகளிரோடு தேவலோகத்தை அடைந்தமையால் புலவர்கள் மிக்க பசியையுடையவர்களாகி அயல்நாடு செல்லுவதாக வருந்திக் கூறியிருத்தலின் இவர் அவனிறந்த பின்பும் இருந்தவரென்று தெரிகின்றது.

பொருந்திலிளங் கீரனார்

  • “செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” எனக் கபிலருடைய கல்வி கேள்விகளை இவர் புகழ்ந்திருத்தலால் இவருடைய நற்குணம் வெளியாகின்றது; 53. இவராற் பாடப்பெற்றோன் சேரன் மாந்தரஞ் சேரலிரும்பொறை.