/ Tamil Pulvarkal / சோழன்குளமுற்றத் …

சோழன்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

    • தன்னாட்டில் வேளாண்மைத் தொழிலிற் சிறந்து விளங்கிய பண்ணனென்பவனுடைய அரிய குணங்களை இவன் பாராட்டிப் பாடினன். இவனது மற்ற வரலாற்றைப் பாடப்பட்ே்டார் பெயர் வரிசையிற்காண்க.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

  • இவன் குளமுற்றமென்னும் இடத்தில் இறந்ததுபற்றி இப்பெயர் பெற்றான்.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன்

  • இவன் ஒரு சேரனோடு பகைமைகொண்டு அவனது கருவூரை யழித்தான். இவனைப் பாடிய புலவர் கோவூர்கிழார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

  • இவனது இராசதானி உறையூர்; மிக்க கொடையும் வீரமும் உடையோன். செய்யுள் செய்தலில் வல்லவன்; கருவூரை முற்றுகைசெய்து சேரனை வென்றவன்.‘ இவனைப் பாடிய புலவர்கள்: ஆலத்தூர்கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், கோவூர்கிழார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், வெள்ளைக்குடி நாகனார்; இவருள், இவன் இறந்த பின்பும் இருந்து பிரிவாற்றாது வருந்தியவர்கள்: மறோக்கத்து நப்பசலையார், ஐயூர்முடவனார், ஆடுதுறை மாசாத்தனார்.