/ Tamil Pulvarkal / சேரமான் …

சேரமான் கணைக்காலிரும்பொறை

  • இவன் சோழன் செங்கணானொடு போர்செய்து பிடிக்கப்பட்டுக் குடவாயிற்கோட்டச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று கேட்டு உடனே பெறாது பின்பு பெற்று அதனை மானத்தால் உண்ணாது கைக்கொண்டிருந்து, “குழவியிறப்பினும்’ என்னும் பாடலைப் பாடித் தன்கருத்தைப் புலப்படுத்தி அப்பால் துஞ்சினான்.