/ Tamil Pulvarkal / மதுரைக் …

மதுரைக் கணக்காயனார்

  • கணக்காயனார் - ஓதுவிப்பார்; “கணக்காயரில்லாத வூரும்” (திரி. 10) . இதனால், இவருடைய தொழில் இன்னதென்று விளங்கும்; திருவருளாற் கிடைத்த சங்கப்பலகையில் முதலில் ஏறி வீற்றிருந்தவரும் நல்லிசைப் புலவர்களின் நடுநாயகமாக விளங்கியவருமான நக்கீரனாருடைய அருமைத் தந்தையார் இவர். இதனாலேயே இவருடைய தவப்பயனும் கல்விப்பெருமையும் விளங்கும்; பகைவருடைய பெருஞ்சேனையைத் தனியே நின்று தடுக்கும் ஒரு வீரனை, “பெருங்கடற் காழி யனையன்”, “தொன்மைசுட்டிய வண்மையோன்” என்று இவர் பாராட்டினர்.