/ Tamil Pulvarkal / கருவூர்க் …

கருவூர்க் கதப்பிள்ளைசாத்தனார்

  • இப்பெயர் கருவூர்க் கந்தப் பிள்ளை, சாத்தனாரெனவும் காணப்படுகின்றது. இவருடைய ஊர் கருவூர். சாத்தனாரென்பது இவரது இயற்பெயர். ‘கதப்பிள்ளை’ என்பவர் இவருடைய தந்தை. சேரன் சேனாதிபதியும் குதிரைமலைத் தலைவனுமாகிய பிட்டங்கொற்றனை நோக்கி, “பாடுப வென்ப பரிசிலர் நாளும், ஈயா மன்னர் நாண, வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே” (168) என்று பாடியுள்ளார்; இப்பாடலிற் குதிரைமலையிலுள்ள குறவர்களின் இயல்பு நன்கு கூறப்பெற்றுள்ளது; ஏனைத்தொகைநுால்களிலும் இவர் செய்யுட்கள் உள்ளன: அகநா. 1; குறுந். 1; நற். 1.