/ Tamil Pulvarkal / சோழன் …

சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி

  • இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் தந்தை; அழுந்தூர் வேளிடை மகட்கொண்டோன். இதனை, “மன்னர்பாங்கின்” (தொல். அகத்திணை. சூ. 30, ந.) என்பதன் உரையாலுணர்க; “உருவப்பஃறே ரிளையோன் சிறுவன்” (130) என்றார் பொருநராற்றுப்படையிலும்; வீரத்திலும் கொடையிலும் சிறந்தோன். இவன் பெயர் இளையோனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்; பரணர், பெருங்குன்றூர்கிழார்.