/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி

  • இவன் அநேக யாகங்களைச் செய்தவன்; பல பகைவர்களையும் அறப்போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தோன்; பெரிய வள்ளல்; சிவபெருமானிடத்து மிக்க பக்தியுடையோன்; இவனைப் பாடியவர்கள்: காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார்; பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யெனவும் இவன் பெயர் வழங்கும்; ‘பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ’ (தொல். கிளவி. சூ. 26, சே. மேற்.)