/ Tamil Pulvarkal / அதியமான் தகடூர் …

அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி

    • இவன் ஓரரசன்; போரில் வல்லவன்; சிறந்த கொடையாளிகளுள் ஒருவன்; செங்கோலையுடையவன்; இவன் யுத்தத்தில் இறந்தபொழுது பிரிவாற்றாது வருந்தி யமனை நோக்கி, “நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி, நீயிழந்தனையே யறனில் கூற்றம், வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான், வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங், கொருவ னாருயி ருண்ணா யாயின், நேரார் பல்லுயிர் பருகி, ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே” என்று அரிசில் கிழார் கூறிய பாட்டே இவன் இத்தன்மையனாதலைப் புலப்படுத்தும்; அதியமான் தகடூரெறிந்துவீழ்ந்த எழினியென்றும் பிரதி பேதமுண்டு.