/ Tamil Pulvarkal / சோழன் …

சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி

    • இவன் யுத்தத்தில் வல்லவன்; தேர்வண்மலையனென்பவனைத் துணையாகக் கொண்டு சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறையோடு பொருது அவனை வென்றான்; சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி யென்பவர்களின் நண்பன். இவனைப் பாடியவர்கள்: பாண்டரங்கண்ணனார், ஒளவையார், உலோச்சனார். இன்னும் இவன் காலத்துப் புலவர் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.

சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி

  • இவன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனோடு போர்செய்து இறந்தான். அக்காலத்து இவனைப் பாடிய புலவர்: கழாத்தலையார், பரணர்; இவன் பெயர் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியெனவும் வழங்கும்.